ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 13 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற 4 அணிகளும் தலா 12 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் டெல்லி கேப்பிடல்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றில் நுழைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 9-ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 5 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் 5 வெற்றிகளுடன் 6-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 5 வெற்றிகளுடன் 7-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 வெற்றியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகமிக முக்கியமானது. இதில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும்.

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டா
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இ
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி 20 போட்டி நே
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மீண்டும் தங
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்றுடன் நிறைவ
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள
