வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் உலகம் முழுவதும் நேற்று முடங்கியதால் பயனாளிகள் பெரிதும் தவித்தனர். இந்தியாவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இதை சுமார் 40 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீரென வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் ஒரே நேரத்தில் முடங்கின. பயனாளிகள் யாரும் இவற்றில் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியவில்லை.
பேஸ்புக்கில் ‘தொழில்நுட்ப கோளாறால் மன்னிக்கவும்’ என தகவல்கள் வந்தன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இந்த சமூக வலைதளங்களால் முடங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் பல முறை இந்த சமூக வலைதளங்கள் முடங்கி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக மட்டுமே பேஸ்புக் நிறுவனம் கூறி வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்புக் முடங்கியது குறித்து டிவிட்டரில் பல பயனாளிகள் கிண்டல் அடித்தும் விமர்சித்தும் பதிவுகளை பகிர்ந்தனர்.
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம
தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன
உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான
ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்
இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரை
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட
