வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் உலகம் முழுவதும் நேற்று முடங்கியதால் பயனாளிகள் பெரிதும் தவித்தனர். இந்தியாவில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இதை சுமார் 40 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் திடீரென வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் ஒரே நேரத்தில் முடங்கின. பயனாளிகள் யாரும் இவற்றில் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியவில்லை.
பேஸ்புக்கில் ‘தொழில்நுட்ப கோளாறால் மன்னிக்கவும்’ என தகவல்கள் வந்தன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இந்த சமூக வலைதளங்களால் முடங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் பல முறை இந்த சமூக வலைதளங்கள் முடங்கி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக மட்டுமே பேஸ்புக் நிறுவனம் கூறி வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்புக் முடங்கியது குறித்து டிவிட்டரில் பல பயனாளிகள் கிண்டல் அடித்தும் விமர்சித்தும் பதிவுகளை பகிர்ந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந
உலகம் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்
ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த
தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க
உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்
கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா 2023ம
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைச
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக
உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர
