உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, லக்கிம்பூர் கேரியில் வன்முறை மோதல்களின் போது உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களை நேரில் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்டோபர் 6-ம் தேதி சீதாப்பூர் மற்றும் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல் காந்தி தலைமையிலான குழுவை அனுமதிக்க வேண்டும் என உ.பி. முதல் மந்திரி மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், லக்கிம்பூர் கேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு செல்ல ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கு அனுமதி இல்லை என உ.பி. மாநில அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம
உக்ரைன் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு பொ
உலகம் முழுவதும் நேற்று முன்தினம் சர்வதேச மகளிர் தினம்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக
பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந
ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல
உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி
உக்ரைனில் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்ய து
இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக
ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதிய
