அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கலிபோர்னியாவில் உள்ள இர்வின் மருத்துவ மைய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
75 வயதான பில் கிளிண்டனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்படவில்லை என்றும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு முந்தைய இதய பிரச்சினை அல்லது கொரோனாவுடன் தொடர்புடையதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில் கிளிண்டனுக்கு ரத்த தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பில் கிளிண்டன் செய்தித்தொடர்பாளர் ஏஞ்சல் யூரேனா டுவிட்டரில் கூறும்போது, பில்கிளிண்டன் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருக்கு சிறந்த கவனிப்பை வழங்கிய டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி என்று கூறி உள்ளார்.
பில் கிளிண்டனின் டாக்டர்கள் அல்பேஷ் அமின், லிசா பார்டாக் கூறும்போது, பில்கிளிண்டன், நெருக்கமான கண்காணிப்புக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நல்ல பலனை அளித்துள்ளது. அவர் விரைவில் வீட்டுக்கு செல்வார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றனர்.
அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்
ஐரோப்பிய நாடான நார்வேவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள்
உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை அடுத்து நட்புறவு நாடுக
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க
அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படு
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச பட
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியா
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்
