பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் அரசிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும்போதே இவ்வாறு குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில்,
“அரசிடம் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இல்லை. தோல்வியடைந்த பொருளாதார முகாமைத்துவமே மக்களை இந்தளவுக்கு பிரச்சினையில் தள்ளியுள்ளது. இப்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விலைகளை அதிகரிக்கும் போது, ஓய்வு பெற்றவர்கள், அரச ஊழியர்கள், நாட்டு மக்கள் எவ்வாறு வாழ்வது என்று கேட்கின்றேன்.
இதேவேளை, தற்போது விவசாயிகள் உரம் இல்லாமல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெருமையுடன் வாழ்ந்த விவசாயிகள் இன்று வறுமையால் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் 7 மூளையுடைய அமைச்சர் ஒருவர் அனைத்து பொருட்களினதும் விலைகளை குறைப்பார் என்றும் கடந்த காலங்களில் கூறினர். ஆனால், தற்போது அந்த 7 மூளைக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார்.
கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை
எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்
வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை
ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை
2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செ
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்
