உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு கொரோனா தொற்றால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில்தான் கொரோனா தொற்று உயிரிழப்புகள் அதிகம்.
அந்த நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கொரோனா வைரசை தீவிரமாக எடுத்து கொள்ளமால் அலட்சியம் காட்டியதே தொற்று மற்றும் உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்கிற குற்றசாட்டு உள்ளது. இது தொடர்பாக போல்சனரோவை பதவி விலகக்கோரி அங்கு பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கொரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்து அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அந்த நாட்டின் பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பாராளுமன்ற குழுவின் 11 உறுப்பினர்களில் 7 பேர் போல்சனரோ மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் 9 குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைக்கும் அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த குழுவின் தலைவர் ஒமர் அசிஸ், இந்த பரிந்துரையை பிரேசிலின் அட்டார்னி ஜெனரலிடம் ஒப்படைக்கவுள்ளார்.
பாராளுமன்ற குழுவின் இந்த பரிந்துரையால் போல்சனரோ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் இந்த பரிந்துரையை ஆய்வு செய்யும் நபரை அதிபரே நியமிப்பார். அது நிச்சயம் அவருக்கு ஆதரவாகத்தான் அமையும்.
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்
அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்
ரஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தல
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்
உலக அளவில்
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம் தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் உக்ரைன் ரஷியா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ம ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
