பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் அரசு மீது கடும் அதிருப்தி அடைந்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. சில மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. ஆனால், மத்திய அரசு கலால் வரியை குறைக்காமல் இருந்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்துள்ளதால், இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. அதேசமயம், பல்வேறு மாநிலங்களும் தங்கள் பங்கிற்கு வாட் வரியை குறைத்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். கலால் வரியை குறைத்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்றும், அரசின் இந்த முடிவு, சமூகத்தின் அனைத்து பிரிவினரின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா
மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ
தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் நே
ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ
கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை
சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த
மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்
மேற்கு வாங்க மாநிலம், வடக்கு பர்கானாஸைச் சேர்ந்த 11 வயத
விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ம
சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த
தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக
