இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்துக்கு இதன்போது பிரான்ஸ் தூதுவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்திட்டத்தினூடாகவும், அமைச்சின் ஊடாகவும் சிறு நடுத்தர பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் அமைச்சரின் பரிந்துரைக்கு அமைய பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் செயற்றிட்ட அறிக்கை கையளித்துள்ளார்.
இதன்மூலம் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறு நடுத்தர உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைக்கு பிரான்ஸ் அரசு நேரடிப் பங்களிப்பை வழங்கும் என்று பிரான்ஸ் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜீ, குமாரசிறி, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் மொஹமட் காதர், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, இ.தொ.காவின் கொழும்பு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரகு இந்திரகுமார் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்
இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்ற
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி
இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டா
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி
கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின
