ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படும் பகுதிகளை ட்ரோன் கமரா கொண்டு காணொளி படம் எடுத்த பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை 8.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக தளதா மாளிகை காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலதா மாளிகை வளாகத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ததாகவும், தனது வலையொளி அலைவரிசைக்காக அந்த காணொளிகளை எடுத்ததாகவும் பங்களாதேஷ் பிரஜை காவல்துறை விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் ட்ரோன் கமரா, தொலைபேசி, கடவுச் சீட்டு உள்ளிட்டவற்றை பொறுப்பேற்றுள்ள காவல்துறையினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் சமில் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, சுற்றுலா காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் இத்தமல்கொட தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறு
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளை
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்
லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தி
அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி
