உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கியுள்ளனர்.
அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள ஒரு ஓட்டலில் இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் அருகே நேற்று குண்டுவெடிப்பு நடைபெற்றது. வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டல் அருகே நிறுத்திய பயங்கரவாதி வெடிகுண்டை திடீரென வெடிக்கச் செய்தான். இந்த வெடிகுண்டு தாக்குதல் உகாண்டாவின் தலைமை காவல் நிலையம் அருகே நிகழ்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், அந்நாட்டின் பாராளுமன்றம் அருகேயும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை காரில் கொண்டு வந்த பயங்கரவாதி பாராளுமன்றம் அருகே அதை வெடிக்கச்செய்தான். இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஓட்டல் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய பாரா பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் சமீபத்தில் பதவி ஏ
தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தின
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக அரசுக்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத
அமெரிக்கா - கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானமொன
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்த
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா
