உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி செலுத்த சொல்லி ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்களை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தடுப்பூசி செலுத்தாத மக்கள் குறித்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது:-
தடுப்பூசி செலுத்தாதவர்களை நான் சிறைக்கு அனுப்பப்போவதில்லை. அவர்களை கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தவைக்கப்போவதில்லை. என்னுடைய திட்டம் எளிமையானது. மக்களை எரிச்சலூட்டபோகிறேன்.
தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உணவகம் செல்ல முடியாது, காபி குடிக்க முடியாது. படம் பார்க்க முடியாது. ஒன்றுமே செய்ய முடியாது என மக்களை எரிச்சலூட்டபோகிறேன். தடுப்பூசி போடாதவர்களை சிறுநீர் கழிப்பதுபோல் உதாசீனப்படுத்தப் போகிறேன். அதுதான் இனி அரசின் கொள்கை.
இவ்வாறு இம்மானுவேல் மேக்ரான் தரக்குறைவாக பேசினார்.
பிரான்சில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன
உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள
உக்ரைன் ரஷியா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ம
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டு
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த திங்கட் 2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பருவநிலை ஆ நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளத உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம ரஷ்யா இராணுவ வீரர்களை தினமும் இழக்கும் உக்ரைன்
