எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பதை தற்போது கணிக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
"நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம், மாதாமாதம், நிலைமையை ஆய்வு செய்து, அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கிறோம். நாட்கள் மாதங்கள் வேகமாக நகர்ந்து செல்கின்றன . அதனால் அடுத்த வாரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வாரம்.
பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகின்றன." "ஏப்ரல் மீண்டும் ஒரு பண்டிகை காலம் வருகிறது, எனவே நாம் தற்போதே அது குறித்து கவனம் செலுத்தி சுகாதார பழக்கங்களுடன் செயற்படுத்தல் கட்டாயமாகும்.
"பிப்ரவரி 1ம் திகதி நாட்டை மூடுவது குறிது எமக்கு இப்போது கணிக்க முடியாது." "வைரஸின் தாக்கம் குறித்து நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். ஆனால் கணிப்பது எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.
புதிய பிறழ்வு வந்தாலும், முகக்கவசத்தை அணிந்திருந்தால் பரவாது. "இன்னொரு விடயம் என்னவென்றால், நாடு இயல்பு நிலைக்கு வரவில்லை, புதிய பொது தனிமைப்படுத்தலுக்குதான் நாம் சென்றுள்ளோம்."
"நம் நாட்டில் கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஒன்றாக தொற்றிய நோயாளர்கள் இதுவரை பதிவாகவில்லை. அவ்வாறு பதிவானாலும், இது ஒரு பாரிய பிரச்சனை இல்லை." என தெரிவித்துள்ளார்.
வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்த
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க
