புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக செயலூக்கி தடுப்பூசிகளை மீண்டும் செலுத்துவது சிறந்த தீர்வாக அமையாது என உலக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
அத்துடன் புதிய திரிபுகளின் பரவலிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் புதிய தடுப்பூசிகளுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . கோவிட் -19 தடுப்பூசிகளின் செயல் திறனை மதிப்பிடுவதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை வலியுறுத்தியுள்ளது.
தற்போது கோவிட் வைரஸின் புதிய திரிபுகள் அதிகரித்து வருவதனால் செயலூக்கி தடுப்பூசியை மீண்டும் மீண்டும் செலுத்துவது சிறந்த வழியாக அமையாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
149 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான நோய் தாக்கங்கள் ஏற்படுவதைத் தடுப்பது மாத்திரமின்றி தொற்று உறுதியாவதை தடுப்பதற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக
பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது
இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும் முக்கிய நோய
கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று தற்போத
மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உங்கள் தலைமுடியை
ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம்
நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு
சமைத்த உணவில் கூடுதல் உப்பைத் தூவுவது உடல்நலப் பிரச்ச
இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு
சமையல் அறையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மசாலா பொ
உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எ
சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேய
பொதுவாக உடல் நலத்தை காக்க இதய நோயாளிகள் மட்டுமின்றி, வ
மாரடைப்பு மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்க சிறுதான
