கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டதுடன், இனி டொலர்கள் இன்றி அவ்வாறு எரிபொருளை வழங்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால், மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால், வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இல்லாவிட்டால் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமென்றும், வாகன சாரதிகளால் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்றும் வலுசக்தி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான முடிவு எடுக்கப்படுமாக இருந்தால் மக்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி
இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்க
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட
தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிப
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு
சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 ப
இன்றைய தினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜ
வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உ
