நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணி இன்று கூடவுள்ளது.
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் அமுலில் இருக்குமென முன்னர் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதனால் சிறந்த பெறுபேற்றை பெற முடியும் என இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவும் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது போக்குவரத்து சேவைகளை முன்னர் காணப்பட்ட வகையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடித்தாலும் மாகாணங்களுக்கு உட்பட்டு பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும்.
எவ்வாறாயினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடித்தால் பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறமாட்டாதென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள
வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக
மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெட
ஒண்லைன் வகுப்புக்கள் மாணவர்களிற்கு பல்வேறு தாக்கங்க
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் இன்றையதினம் 20.05.2022
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி
இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமை
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்
இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு
