தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும், அது தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்றும் கூடியது.
சபை முதல்வர் தினேஸ்குணவர்தன தலைமையில் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்றைய தினம் கூடியிருந்தது.
இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி, தெரிவுக்குழுவில் முன்னிலையாகி தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான யோசனைகளை முன்வைத்திருந்தது.
அதேநேரம், மாகாணசபை தேர்தல் முறைமையில் உள்ள குறைப்பாடுகளை கண்டறிந்து அது தொடர்பான தீர்வு மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவும் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும், அது தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, எமது மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் யோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக அந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்க
புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு
ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வ
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை
