மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். 40 விவசாய சங்கங்கள் இணைந்த ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ என்ற அமைப்பின் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயித் அரியானா மாநிலம் பானிபட்டில் நடந்த விவசாயிகள் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு வேளாண் சட்டங்களை விரைவில் ரத்து செய்யாவிட்டால், சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு நாடு முழுவதும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று போராட்டம் நடத்தும் என்றார்.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மத்திய அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படும், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் ராகேஷ் திகாயித் கூறினார்.
சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில்
பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை
ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வா
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நட
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ந தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்த
