உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுடன் கோவா மாநிலத்திலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த முறை கோவா சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
இந்நிலையில், கோவா மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான லூய்சின்ஹோ பலேரோ இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்தும் வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசிய சில மணி நேரங்களில் அவர் காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.
பிரதமர் மோடிக்கும் அவரது அதிகாரத்துக்கும் கடும் சவால் அளித்தவர் மம்தா பானர்ஜி. பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 200 கூட்டங்களை நடத்தினார். அமித் ஷா 250 கூட்டங்களை நடத்தினார். அத்துடன், அமலாக்கத்துறை, சிபிஐ கெடுபிடியும் இருந்தது. ஆனால், மம்தா பார்முலா வெற்றி பெற்றுள்ளது’ என்று லூய்சின்ஹோ பேசியது குறிப்பிடத்தக்கது.
லூய்சின்ஹோ திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் மற்றும் பிரசன் பானர்ஜி ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர்.
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால
‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடன் ப
ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற
ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இண
சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம
கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத
புனே மாவட்டம் முல்சி தாலுகா பிரன்கட் எம்.ஐ.டி.சி. தொழிற
பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க
* மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருண
எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத
ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட
