நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான பஜிரோ வண்டியை திருடிச் சென்றுள்ளதாக நிட்டம்புவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவை நகரில் வாகன விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரின் வாகனமே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ள திருடன், சாவிகள் மாட்டி வைக்கும் இடத்தில் இருந்து வண்டி சாவியை எடுத்து, பஜிரோவை கொள்ளையிட்டு சென்றுள்ளமை காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் போது தெரியவந்துள்ளது.
கொள்ளை நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கியுள்ளனர். பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி சந்தேக நபர் கொழும்பு - கண்டி பிரதான வீதி ஊடாக கொழும்பு திசை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து இன்று பில
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ம
68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்
சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு
யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட
சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இ
முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மற
கொவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப
கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேர
வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
