நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான பஜிரோ வண்டியை திருடிச் சென்றுள்ளதாக நிட்டம்புவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவை நகரில் வாகன விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரின் வாகனமே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ள திருடன், சாவிகள் மாட்டி வைக்கும் இடத்தில் இருந்து வண்டி சாவியை எடுத்து, பஜிரோவை கொள்ளையிட்டு சென்றுள்ளமை காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் போது தெரியவந்துள்ளது.
கொள்ளை நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கியுள்ளனர். பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி சந்தேக நபர் கொழும்பு - கண்டி பிரதான வீதி ஊடாக கொழும்பு திசை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
உலகநாயகன் கமல
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட
கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்த
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச
சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்த
