தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை பனாமுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த சகோதரனின் மற்றைய சகோதரனின் வீட்டு நாய் கடித்தமையே கொலைக்கான பிரதான காரணம் என பனாமுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை நாய் கடித்ததால் ஆத்திரமடைந்த மூத்த சகோதரர், தம்பியின் வீட்டிற்கு சென்று தம்பியின் மனைவியை தாக்கியுள்ளார்.
இதையறிந்த தம்பி அண்ணின் வீட்டுக்குச் சென்று அண்ணனை அரிவாள் மற்றும் கோடாரியால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் எம்பிலிப்பிட்டிய, முலதியாவல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பனாமுர பொலிஸார் சந்தேக நபரை கத்தி மற்றும் கோடரியுடன் கைது செய்துள்ளனர்.சம்பவத்தில் பலத்த காயமடைந்த சந்தேக நபரின் மனைவி எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை தி
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க
ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே
நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட
யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட
இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர
கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்க
