கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சிறுமி விளையாடிகொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பளை நில்லம்பே பகுதியை சேர்ந்த மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியதுள்ளது. குறித்த சிறுமி தனது அத்தையின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தந்தை கதிர்வேல் யோகராஜா கண்டி பொதுச்சந்தையில் பணிபுரிகிறார். அவர் பணிக்கு சென்ற பின்னர், தாய் பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் , அவர்களின் மூன்று பிள்ளைகளும் அருகில் வசிக்கும் சிறுமியின் தந்தையின் சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
இதன்போது இரண்டு குடும்பத்தின் பிள்ளைகளும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியை படிக்குமாறு அத்தை கூறியதாக தெரியவந்துள்ளது. அதன் பின்னர் நேற்று முன்தினம் மாலை பிள்ளைகள் டி.வி பார்த்துக் கொண்டிருந்த போது சிறுமி காணாமல் போயுள்ளமை தெரிய வந்ததையடுத்து அயலவர்கள் ஒன்று திரண்டு சுற்றுவட்டார வீடுகளிலும், வனப்பகுதிகளிலும் தேடியும் சிறுமி தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட பொலிசார் மோப்ப நாய்களை கொண்டு அப்பகுதியில் சோதனை நடத்திய போதிலும் நேற்று வரை சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகின்ற நிலையில், சிறுமி மாயமான சம்பவம் பெரும் அச்சதை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வி
கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி
இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு
சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறி
நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து இன்று பில
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத
அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்க
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு
கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியா
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்
