சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு தடுப்பு உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுகாதார அமைச்சிற்குள் நுழைய முயற்சித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கலகம் அடக்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பள உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி 18 சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு 3 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தநிலையில், தமது பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.சம்பள பிரச்சினை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி தாதியர்கள், துணை மருத்துவர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு
பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களி
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர
ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த க
கோவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொர
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
