இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிகழ்வு மேலாண்மை, ஆடை வடிவமைப்பு மற்றும் பிற துணைத் துறைகளையும் மேம்படுத்த உதவும் என அச் சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதோடு இலங்கை சுற்றுலாத்துறையானது ‘திருமண சுற்றுலா’விற்கும் புதிய உத்வேகத்தை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். நிகழ்வு முகாமைத்துவ நிறுவனங்கள், திருமணத்தை திட்டமிடுபவர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஏனையவர்களை ஒரே மேடையின் கீழ் பட்டியலிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
திருமண சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்தியா, மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் போன்ற பிராந்திய நாடுகளுடன் இலங்கை உறவுகளை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும் அதேவேளை , ஐரோப்பா, ஆசியா மற்றும் பல சந்தைகளில் திருமண தலமாக இலங்கை ஏற்கனவே பெயர் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களி
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ
பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களி
தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்
5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற
முல்லைத்தீவு மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று க
சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே
2022 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொ
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப
