பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம் அட்டைகளை பதிவு செய்வதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீதியமைச்சர் அலி சப்ரி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
“சில நேரங்களில், ஒரு நபரின் பெயரில் பல சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலருக்கு தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகள் இருப்பது கூட தெரியாது. இறந்த நபர்களின் கீழ் சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் உள்ளன.
எனவே, சிம் அட்டைகளை பதிவு செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எனவே உரிமையாளரின் அடையாளத்தை நேரடியாக அங்கீகரிக்க முடியும், ”என்று பொது பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட சட்டங்களை உருவாக்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
பொது பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளின் கையிருப்புகளை அழிக்க வேண்டிய சட்டங்களை இயற்றுவது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (05) இடம்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குக
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி
நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதா
இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள
கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூ
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 ப
வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலி
