மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிகளுக்கு பிரித்தி, ஹரிணி என இரண்டு பெண் குழந்தைகள் குகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சரண்யா இறந்துவிட்டதாக அவரது தம்பிக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தாய், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கணவர் தான் அடித்து கொன்றுள்ளார் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிய அவரது கணவர் லட்சுமணனை தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், சரண்யா மற்றும் லட்சுமணன் இருவரும் பள்ளி படிக்கும்போதே காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், கூலி வேலை செய்யும் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறினார்.
சம்பவத்தின் போது, தான் குடிக்க வாங்கி வைத்திருந்த மதுவை மனைவி குடித்துவிட்டு, தன் குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருந்த உணவையும் சாப்பிட்டுவிட்டு, அது சரியில்லை என தகராறு செய்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த நான், மனைவியை அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து லட்சுமணனை தீவட்டிப்பட்டி காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து மிக மோசமான ப
டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில்
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செ
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூச
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை
ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந
மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாத
