More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பலத்த மோதல் போர்க்களமாக மாறிய பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் !
பலத்த மோதல் போர்க்களமாக மாறிய பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் !
Feb 13
பலத்த மோதல் போர்க்களமாக மாறிய பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் !

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா விதிகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கவலரமாக மாறியது.



கலவர தடுப்பு பொலிசார் கண்ணீர்ப்புகை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர். ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையிலும், கனடாவில் முன்னெடுக்கப்படும் லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் போன்றதொரு கூட்டத்தை பாரிஸ் நகரிலும் ஏற்படுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றுள்ளனர்.



சுமார் 7000 பொலிசார் குவிக்கப்பட்டிருந்தும், பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்துள்ளது. சம்பவப்பகுதியில் இருந்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அனுமதி அளிக்கப்படாத ஆர்ப்பாட்டக்காரர்கள் போக்குவரத்தைத் தடுக்க தங்கள் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர், மேலும் அவர்களை வாகனங்கள் இல்லாமல் மற்றவர்களால் ஆதரிக்கப்படுகிறார்கள்.



சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டம் முறியடிக்கப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் நகரில் நுழைய முயன்ற சுமார் 5 வாகன பேரணியை பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன், 200கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.



மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 54 பேர்களை பாரிஸ் நகரில் மட்டும் பொலிசார் கைது செய்துள்ளனர். இரவு 8 மணி கடந்தும் கூட்டம் கலையாத நிலையில் பொலிசார் கண்ணீர்ப்புகை வீசியுள்ளனர்.



இதனிடையே, சோம்ப்ஸ் எலிசே பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பலத்த மோதல் வெடித்துள்ளது. பல எண்ணிக்கையிலான வாகனங்களை சோம்ப்ஸ் எலிசே பகுதியில் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், அங்கு காவல்துறையினர் முன்னாதாகவே நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்கார்களை காவல்துறையினர் கலைந்துபோக பணித்தபோதும், அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.



இதனால் காவல்துறையினர் கண்ணீர்புகை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர். அதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.



இதில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர். 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 337 பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்

Aug29

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள ந

Mar31

ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று த

Sep24

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட

Apr01

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில்

Mar12

ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற

Feb20

அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா

Mar08

கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற

Mar18

யுக்ரைனில் - ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக

Mar10

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Oct05

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநா

Aug09

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர

Apr27

இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அட

May21

மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்

Mar06

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (12:04 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (12:04 pm )
Testing centres