More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பலத்த மோதல் போர்க்களமாக மாறிய பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் !
பலத்த மோதல் போர்க்களமாக மாறிய பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் !
Feb 13
பலத்த மோதல் போர்க்களமாக மாறிய பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் !

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா விதிகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கவலரமாக மாறியது.



கலவர தடுப்பு பொலிசார் கண்ணீர்ப்புகை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர். ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையிலும், கனடாவில் முன்னெடுக்கப்படும் லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் போன்றதொரு கூட்டத்தை பாரிஸ் நகரிலும் ஏற்படுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றுள்ளனர்.



சுமார் 7000 பொலிசார் குவிக்கப்பட்டிருந்தும், பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்துள்ளது. சம்பவப்பகுதியில் இருந்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அனுமதி அளிக்கப்படாத ஆர்ப்பாட்டக்காரர்கள் போக்குவரத்தைத் தடுக்க தங்கள் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர், மேலும் அவர்களை வாகனங்கள் இல்லாமல் மற்றவர்களால் ஆதரிக்கப்படுகிறார்கள்.



சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டம் முறியடிக்கப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் நகரில் நுழைய முயன்ற சுமார் 5 வாகன பேரணியை பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன், 200கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம் விதித்துள்ளனர்.



மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 54 பேர்களை பாரிஸ் நகரில் மட்டும் பொலிசார் கைது செய்துள்ளனர். இரவு 8 மணி கடந்தும் கூட்டம் கலையாத நிலையில் பொலிசார் கண்ணீர்ப்புகை வீசியுள்ளனர்.



இதனிடையே, சோம்ப்ஸ் எலிசே பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பலத்த மோதல் வெடித்துள்ளது. பல எண்ணிக்கையிலான வாகனங்களை சோம்ப்ஸ் எலிசே பகுதியில் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், அங்கு காவல்துறையினர் முன்னாதாகவே நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்கார்களை காவல்துறையினர் கலைந்துபோக பணித்தபோதும், அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.



இதனால் காவல்துறையினர் கண்ணீர்புகை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர். அதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.



இதில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர். 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 337 பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun09

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்

May08

உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு

May29

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா

May06

பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாக

Feb18

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே

Jun15
Jan12

  அமெரிக்காவின் டெக்சாஸ் மஞத்தை சேர்ந்த சாண்ட்ரா வில

Mar30

உக்ரைனின் மரியபோல் நகரில் இதுவரையில் 5000 பேர் கொத்து கொ

Sep26

அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப

May14

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல

Apr04

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்ற

Aug13

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதி

Apr22

ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை

Mar30

ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராண

Jul22

சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழைய

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:40 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:40 am )
Testing centres