மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
சமீபத்தில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு 'இறைவன் மிக பெரியவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இறைவன் மிக பெரியவன் தலைப்பில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மூன்று மதத்தின் அடையாளங்களை இடம் பெறச்செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
தளபதி விஜய் நடிப்
முன்னணி நடிகர் விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமானவர
‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்த
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
பிக்பொஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாள
சீரியல்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்க
தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,
விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் &ls
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
பிரபல தொகுப்பாளினியான பிக்பாஸ் பிரியங்கா தனது தந்தைய
