வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இந்திய அணியில் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் தனியார் விளையாட்டு செய்தி நிறுவனத்திற்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
பிஷ்னோய் மிகவும் திறமையான பையன், அதனால்தான் நாங்கள் அவரை உடனடியாக அணியில் சேர்த்தோம். அவரிடம் வித்தியாசமான ஒன்றைக் காண்கிறோம். அவரிடம் நிறைய மாறுபாடுகள் மற்றும் திறமைகள் உள்ளன.
அவர் எந்த நிலையிலும் பந்துவீச முடியும், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. போட்டியை நாங்கள் சீக்கிரம் முடித்திருக்க வேண்டும், இந்த வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இந்த ஆட்டம் அதிக நம்பிக்கையை தருகிறது. பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் அவர்களை(வெஸ்ட் இண்டீஸ்) குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்ட
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண
சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர
இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி க
இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை இடம்
இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வ
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
