பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாறை ஒன்றின் கீழ் இருந்து 80 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துளள்னர்.
பாணந்துறை குற்ற விசாரணை பிரிவினரால் இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மறைந்திருந்து பாரியளவு போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பாணந்துறை சலிது என்பவருக்கு சொந்தமானதென கூறப்படும் பணமே இவ்வாறு கண்டுபிடிக்ககப்பட்டுள்ளதென குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சலிதுவின் போதை பொருள் வர்த்தகத்திற்கு உதவும் பிரதான உதவியாளர் பணம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை குற்ற விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய, அந்த நபரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு அருகில் குருப்புமுல்ல விகாரையின் கற்பாறையின் கீழ் பாரிய அளவு பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுக
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது எரிபொருளின் விலையை நள்ளிரவு
சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்க
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங
இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய
