ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு பிறகு, உக்ரைன் மிகுந்த நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்கு தயாராக இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சிய் ரெஸ்னிக்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் கிளர்ச்சியாளர்களை அதிகம் கொண்ட கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் திங்கள்கிழமை அறிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி புதின் இந்த பகுதிகளை சுதந்திர பகுதிகளாக அறிவித்ததுடன், அப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ரஷ்ய ராணுவத்தையும் உதவுமாறு உத்தரவிட்டார்.
உக்ரைனின் இறையாண்மையை களங்கப்படுத்தும் இந்த செயலுக்கு பல நாடுகளும் தங்கள் எதிர்ப்பு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்த குறிப்பிட்ட இரண்டு பகுதிகளின் மீது பொருளாதார தடைகளையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சிய் ரெஸ்னிக்கோவ் (oleksii reznikov) வெளிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மிகுந்த நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் தன்னை தற்காத்துக்கொள்ளவதற்காகவும், அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர
குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் ரஷ்ய ராணுவ
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்க
ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி
கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்ன
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதி
ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்த
அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ
தென் கொரியாவின் சாம்சங் நிறுவன தலைவருக்கு ஒரு பெரிய ஊ
யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி முற்றிலும் கண்ணாடியா
