மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கேரல் என்பவர் தனியார் கால் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி தோழி ஒருவரை சந்திக்க போவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற நிலையில் இரவு 10 மணிக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து பதற்றமடைந்த அவரது பெற்றோர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி பல்கார் நகரில் உள்ள புதர் ஒன்றில் கேரலின் சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப்பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து கேரலின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் அப் தகவல்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜீக்கோ என்ற கேரலின் நண்பர் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஜீக்கோவின் தந்தை அன்சேம் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அதில் ஜீக்கோ சம்பவம் நடந்த இரவு பைக்கில் வெளியே செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் வீட்டில் மறைத்து வைத்திருந்த அவரது லேப்டாப்பையும் எடுத்து ஆராய்ந்ததில் அன்சேம் திரட்டி காவல் நிலையத்திற்கு போன் செய்து மகனை பிடித்துள்ளார்.
ஜீக்கோவிடம் போலீசாரிடம் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்த காரணத்தால் கேரலை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8-ம் வக
மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுத
ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சித்தூர் ஆகிய ஊர்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ
அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்
தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட
மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த
டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த
சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் க
