நேற்று இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மிக விரைவில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன குறிப்பிட்டார்.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொவிட் தொற்றுநோய் காரணமாக பல சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வழமை போன்று நடத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக , 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சுமார் 5 மாத கால தாமதத்தின் பின்னர் இன்று நடைபெற்றது.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 255,062 சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளும் 85,446 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2,943 பரீட்சை மத்திய நிலையங்களிலும், 108 விசேட மத்திய நிலையங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பி
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம
நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற
நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக
நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்ப
சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க
