கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 30 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த இளைஞனின் தந்தையின் சகோதரனே இக்கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (30) காலை காணியின் எல்லை தொடர்பில் உயிரிழந்த நபருக்கும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று மதியம் கொலையுண்ட இளைஞரின் வீட்டிற்கு மரம் வெட்டும் இயந்திரத்துடன் சென்று குறித்த இளைஞரை கால் மற்றும் கையை வெட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், பிரதேசவாசிகள் இளைஞனை பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்
மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், மு
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்தி
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீத
பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ,
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒர
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற
இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி
