திருமதி இலங்கை அழகி பட்டம் வென்ற புஷ்பிகா டி சில்வா, தம்மை மிரட்டியதாக பிரபல அறவிப்பாளரும் தொகுப்பாளருமான தானு இன்னிசைத்தம்பி, முறைப்பாடு செய்துள்ளார்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். திருமதி உலக அழகி ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் தானா ஜோன்சனுடன் அண்மையில் தாம் செய்த நேர்காணல் தொடர்பில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி வாயிலாக புஷ்பிகா தம்மை அச்சுறுத்தியதாக தானு தெரிவித்துள்ளார்.
இம்முறை திருமதி உலக அழகி போட்டியின் போது தமக்கு கிடைக்கவிருந்த பட்டத்தை, முன்னாள் திருமதி பிரபஞ்ச அழகி ரோசி சேனாநாயக்க தடுத்து விட்டதாகவும் புஷ்பிகா அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை நடைபெற்ற திருமதி உலக அழகிப் போட்டியில் தாம் 4ம் இடத்தை வென்றதாக புஷ்பிகா முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் புஷ்பிகா தம்மை தொலைபேசியில் மிரட்டியதாக தானு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும், முதல் இரண்டு இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டதாகவும் நான்காம் இடம் வழங்கப்படவில்லை எனவும் திருமதி உலக அழகிப் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் ஜோன்சன், தானுவிடம் கூறியிருந்தார்.
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய
தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்
பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களி
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ
வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான
பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகள் சுகவீ
இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
நாளை (08), நாளை மறுதினம் (09) மற்றும் திங்கட்கிழமை (10) ஆகிய தி
இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
