இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச அரசு வேடிக்கை பார்க்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையிலும் ராஜபக்ச அரசு அரசியல் இலாபம் தேடுகின்றது. அதனால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இந்த அரசு பின்னடிக்கின்றது.
நாட்டின் நலன் கருதி - வடக்கு கரையோர மக்களின் நன்மை கருதி இந்திய அரசுடன் இது தொடர்பில் அரசு பேச்சு நடத்த வேண்டும். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் வடக்கு கடல் வளம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
வடக்கு கடற்றொழிலாளர்களின் உணர்வுமிக்க போராட்டத்துக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரத
நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திர
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 19ஆம் திகதி பங்களாதே
நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி
கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத
போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போ
