இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச அரசு வேடிக்கை பார்க்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையிலும் ராஜபக்ச அரசு அரசியல் இலாபம் தேடுகின்றது. அதனால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இந்த அரசு பின்னடிக்கின்றது.
நாட்டின் நலன் கருதி - வடக்கு கரையோர மக்களின் நன்மை கருதி இந்திய அரசுடன் இது தொடர்பில் அரசு பேச்சு நடத்த வேண்டும். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் வடக்கு கடல் வளம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
வடக்கு கடற்றொழிலாளர்களின் உணர்வுமிக்க போராட்டத்துக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.
கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுற
கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில
பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப்ரயோ
இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பத
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படு
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்
மன்னார் க
நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட
இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)
நாட்டின் பொருளாதாரத்த
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு
நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு
பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து
