எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம், சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 4 இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுவிக்குமாறு, நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர் நால்வரும், படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் கரை ஒதுங்க நேரிட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டக்களப்பிலிருந்து கடல் தொழிலுக்கு சென்றவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி கடற்றொழில் ஈடுபட்டதாகக்கூறி, அவர்களைக் கைது செய்தமை சட்டத்திற்குப் புறம்பானதாகும். எனவே, சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் நால்வரையும் விடுவித்து, இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுக
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அ
ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா
ஒரு கப் டீ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அத
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமு
சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்திய
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப
ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ
இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ
தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட
பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
