உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுக்கு உதவ தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் ஏஞ்சலினா ஜோலி, மேலும் சமீபத்தில் அகதிகளுக்கான உதவிகளை வழங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். ஏமனின் தற்போதைய நிலைமையை வெளிச்சம் போட்டு வெளியுலகிற்கு காட்டும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது பதிவில் "இது உலகின் மிக மோசமான பிரச்சனைகளில் ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார். ஏஞ்சலினா ஜோலி ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமையுடன் (UNHCR) உதவிகளை வழங்குவதற்காக பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில், ஏஞ்சலினா ஜோலி ஏமனின் நிலைமையை வெளியுலகின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார்.அவர் பதிவில், "நான் ஏமனில் தரையிறங்கினேன், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் அகதிகளை சந்திக்கவும், ஏமன் மக்களுக்கு எனது ஆதரவைக் வழங்கவும்.
என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம், நான் உங்களுக்காக இங்கேயேதான் இருக்கிறேன்." என்று அவரது பதிவில் எழுதியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மோதல் நடைபெறும் நிலையில், ஏமனின் நிலைமைகளில் ஒன்றும் பெரிய வித்தியாசம் வந்துவிடவில்லை என்று ஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார். அதன்மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஏமன் பக்கம் திரும்பியுள்ளார், அது மட்டுமின்றி அவர்களுக்காக உதவுவதற்கு தான் இருப்பதாக முன்னிலையில் நிற்கிறார். ஏமனின் நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஏஞ்சலினா ஜோலி, இது உலகின் மிக மோசமான கொடுமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile
உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தே
கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி
நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவி
உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர்
தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட
எப்போதும் சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி துணை ந
கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன
ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
