More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யா இந்த நாட்டினால் தண்டிக்கப்பட வேண்டும்! உக்ரைன் எம்.பி நம்பிக்கை!
ரஷ்யா இந்த நாட்டினால் தண்டிக்கப்பட வேண்டும்! உக்ரைன் எம்.பி நம்பிக்கை!
Mar 10
ரஷ்யா இந்த நாட்டினால் தண்டிக்கப்பட வேண்டும்! உக்ரைன் எம்.பி நம்பிக்கை!

இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெரும் சக்தியாக இந்தியா இருக்குமென உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 14 வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யப் துருப்புகளுக்கு எதிராக தற்போது அங்குள்ள பொதுமக்களும் கைகளில் ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றனர்.   



இது, ரஷ்ய துருப்புகளின் முன்னேற்றத்தை பல இடங்களில் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ராணுவம் ஒருபுறம், பொதுமக்கள் ஒருபுறம் என இரு முனை தாக்குதலை ரஷ்ய துருப்புகள் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இதேவேளை, உக்ரைனைச் சேர்ந்த இளம் எம்.பி.யான ஸ்வியாட்டோஸ்லாவ் யுராஷும் (Sviatoslav Yurash) உக்ரைன் ராணுவத்தினருக்கு துணையாக துப்பாக்கியை ஏந்தி களத்தில் இறங்கி சண்டையிட்டு வருகிறார். இதுதொடர்பான செய்திகள் அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன.  



இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது, 



உக்ரைன் நாட்டை அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் வரை நாங்கள் ஆயுதத்தை கைவிட மாட்டோம். உயிர் இருக்கும் வரை தாய்நாட்டுக்காக போராடுவோம். இந்த போர் சூழலில், உக்ரைனுக்கு பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.அதில் குறிப்பிடத்தக்க நாடு இந்தியா. உக்ரைன் மக்களுக்காக இந்தியா செய்து வரும் மனிதாபிமானமிக்க உதவிகளை நாங்கள் மறக்க மாட்டோம். இந்த நூற்றாண்டை தீர்மானிக்கப் போகும் சக்தியாக இந்தியா இருக்கிறது.



உக்ரைன் - ரஷ்யா போரில் தாங்கள் எடுத்து வரும் நிலைப்பாட்டை இந்திய மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். உக்ரைன் விவகாரத்துக்காக மட்டுமல்லாமல், ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் (Vladimir Putin) கடந்த 20 வருடங்களாக செய்து வரும் மனிதநேயமற்ற செயல்களுக்காக அந்நாட்டுடனான உறவு குறித்து இந்தியா சிந்திக்க வேண்டும். தனது தவறுக்காக ரஷ்யா இந்தியாவால் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan17

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந

May18

ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக

Aug21

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த

Jan29

அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்

May17

கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்

Jul26

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளி

Jun28

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  கடந்த ஆண்டு உரையாற்றி

Jul16

கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி

Mar31

இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவி

May23

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல

Feb02

2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு  பருவநிலை ஆ

Dec27

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ

Aug17

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத

Jan27

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம

Apr03

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (13:43 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (13:43 pm )
Testing centres