உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தோலியடையும் என கனடா அறிவித்துள்ளது. இந்த போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமில் புடின் தோல்வியடைவார் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், 15வது நாளாக போர் நீடித்துள்ளது. இரு நாட்டு படையினரும் கடுமையாக போராடி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் காரணமாக உக்ரைனில் இருந்து பொது மக்கள் வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரியுள்ளனர். இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் முன்னணி நிறுவனங்களும் ரஷ்யாவிற்கான சேவைகளை நிறுத்தியுள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக போரை தொடங்கிய பயங்கரமான தவறை செய்துள்ளார்.
இந்த போரில் அவர் தோல்வி அடைவார். தங்கள் பிரதேசத்தை பாதுகாக்க உக்ரேனிய மக்களின் மூர்க்கத்தனமும் வலிமையும் உறுதியும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரி
இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்ய
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் ஆய
சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile
நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோ
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கத்த
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயண
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர
மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா
