ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் சர்வதேச அளவிலுள்ள செய்தி ஊடகங்களை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 17ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன், பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தி வருகின்றன.
அதன்படி ரஷ்யாவின் செய்தி ஊடகங்கள் இனி யூடியூப் பக்கங்களில் இடம் பெறாது. இது ஆர்டி, ஸ்புட்னிக், டாஸ் உள்ளிட்ட பல ரஷ்ய செய்தி நிறுவனங்களுக்கு பெரும் வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இப்போது வன்முறை நிகழ்வுகளின் கொள்கையின் கீழ் வந்துள்ளதாகவும், அதன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யூடியூப் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஷாத் ஷாட்லூ தெரிவித்துள்ளார்.
ஆயினும் சர்வதேச அளவில் எந்தெந்த சேவைகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், அவை எப்போது நீக்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க யூடியூப் நிறுவனம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க
சூரியனுக்கும், புவிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நி
உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெ
பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள
கடும் கொரோனாவைரஸ் முடக்கல் நிலைமைக்கு மத்தியில் சீன ம
அமெரிக்க மாகாணத்தை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கி
Network உலகின் அடுத்த மைல் கல்லாக 5G Network சேவை கருதப்படுகிறது.
வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை
கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில்
