More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அரை மணிக்கு ஒரு முறை குண்டு வீச்சு; முள்ளிவாய்க்காலாக மாறிய உக்ரைனின் மரியுபோல் நகரம்
அரை மணிக்கு ஒரு முறை குண்டு வீச்சு; முள்ளிவாய்க்காலாக மாறிய உக்ரைனின் மரியுபோல் நகரம்
Mar 12
அரை மணிக்கு ஒரு முறை குண்டு வீச்சு; முள்ளிவாய்க்காலாக மாறிய உக்ரைனின் மரியுபோல் நகரம்

 உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியுள்ள நிலையில் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.



இந்த நிலையில் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் ரஷ்யப் படைகள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குண்டு வீசுவதால் அங்குள்ள 4 லட்சம் மக்களும் கடந்த இரண்டு நாட்களாக நரகத்தில் சிக்கியது போல தத்தளிக்கிறார்கள் என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.



மரியுபோலை கிட்டத்தட்ட தனது முழுமையானக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்ய படைகள்.அங்கிருந்து , யாரையுமே வெளியேற ரஷ்ய படைகள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.



உக்ரைனின் கார்சன், ஒடேசா, செர்னிஹிவ், செனோபில், மரியுபோல், சுமி எனப் பல நகரங்களை தன்வசப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள் தற்போது தலைநகர் கீவை குறிவைத்து முன்னேறி வருகிறது.



உக்ரைன்  மரியுபோல்



கீவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதனால் கீவ் நகரிலிருந்து 20 லட்சம் மக்கள் வெளியேறியதாக அந்நகர மேயர் கூறியுள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 40 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இவ்வாறான நிலையில் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர்ச் சூழல் குழப்பமானதாக மாறியுள்ளதால் அந்நாடுகள் பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த மத்தியஸ்தம் தேவை என சீனப் பிரதமர் லீ கருத்து தெரிவித்துள்ளார்.



எனினும் , ரஷ்யா மீது சீனா தடை விதிக்குமா? ரஷ்யாவின் செயல்களுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்குமா போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.



அதேசமயம் உக்ரைன் உயிரி ஆயுதங்களை தயாரிக்கிறது என ரஷ்யாவும், ரஷ்யா தான் தயாரிக்கிறது என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் கூறிவரும் நிலையில் உக்ரைனில் உள்ள சோதனைக் கூடங்களில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் நோய்க்கிருமிகளை அழித்துவிடுமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.



இந்நிலையில் ரஷ்ய நேரப்படி மார்ச் 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் கீவ், சுமி, கார்கிவ், மரியுபோல், செர்னிஹிவ் ஆகிய 5 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற மனிதாபிமான வழித்தடம் அனுமதிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில்  இரு நாடுகளுக்குமிடையிலான போர்  முடிவுக்கு வருமா என்கின்ற எதிர்பார்ப்பு  உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.



முள்ளிவாய்க்கால்இதேவேளை ரஷ்யாவின் மிலேச்சத்தனமான  தாக்குதலால் உக்ரைனின் மரியுபோல் நகரம்  முள்ளிவாய்காலாக மாறியுள்ளதாக இலங்கை தமிழர்கள் ஆதங்கத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத

May15

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவி

Jan01

தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திர

May11

இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெர

May31

ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக 

வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண

Apr02

அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த

Mar27

உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட

Feb04

ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு

Apr02

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar06

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்

Jul18

அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்க

May03

எதிர்கொண்டிருந்த நிலையில் தப்பியோடிய கைதி ஒருவரையும

Sep21

உலகம் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்

Oct21

இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து  திரவங்களால்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (13:51 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (13:51 pm )
Testing centres