உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவுள்ள போர் ரஷ்யாவின் “புதிய ஸ்டாலின்கிராட்” ஆக இருக்கலாம் என்று உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் இளைய நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்வியாடோஸ்லாவ் யூரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கீவ் நகரின் புறநகர்ப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் ரஷ்ய படைகள் நகரத்தை நோக்கி முன்னேறினால், அது பாரிய இழப்புகளுக்கு தயாராக வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கீவ் என்பது மில்லியன் கணக்கான மக்கள் வசிக்கும் ஒரு பெரிய நகரம், ரஷ்யர்கள் உள்ளே வர முயற்சித்தால் அவர்கள் கைகளில் சண்டையிடுவார்கள் - ரஸ்யர்கள் அதை உருவாக்க விரும்பினால், இது அவர்களின் ஸ்டாலின்கிராட் ஆக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1942-43 ஆம் ஆண்டின் இரண்டாவது உலகப் போரின் இரத்தக்களரி போரையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சோவியத் ரஸ்யாவின் ஸ்டாலின்கிராட் என்ற இடத்தை கைப்பற்றுவதற்காக இடம்பெற்ற போரின்போது 11 லட்சம் சோவியத் துருப்புக்கள் மற்றும் 800,000 நாஸி ஜெர்மன் மற்றும் ரோமானிய படையினர் மரணித்தனர்.
இந்த போரில் சோவியத் ரஸ்யா இறுதியில் வெற்றிப்பெற்றது.எனவே உக்ரைன் தலைநகர் கீவ் போரின் போது எவரும் சரணடையப் போவதில்லை - இதற்கு நிச்சயமாக உத்தரவாதம் அளிக்க முடியும் என்று ஸ்வியாடோஸ்லாவ் யூரா குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த
இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர
ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை த
பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் பிரதமா் நரேந்திர
2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75
ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும
ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பா
உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான
ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவ
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ம
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், நேற்று டெல்ல
தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது
