போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறித்த இராணுவ தளம் முற்றாக நிர்மூலமானது.
உக்ரைனிலிருந்து போலந்துக்கு தப்பிச் செல்ல மக்களால் பயன்படுத்தப்படும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
லீவிவ் நகருக்கு வெளியில் உள்ள இராணுவ தளத்தில் ரஷ்யா 30 ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்து பல மணி நேரங்களுக்கு பிறகும் அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு தொடர்ந்து செல்கிறது. அதிகாரிகள் அங்கே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 19 வயது மாணவர் டக்னிச் விடாலி, ஏவுகணை தாக்கியதும் வானம் சிவப்பாக மாறியதாக தெரிவித்தார்.
"வெடிப்பு சத்தத்தை கேட்டு நாங்கள் தூக்கத்திலிருந்து எழுந்தோம். அது மிகவும் அச்சமாக இருந்தது" என்றார் விடாலி.
அதுமட்டுமல்லாமல் தனது 25 வயது உறவினர் அந்த இராணுவ தளத்தில் பயிற்சியில் இருந்ததாகவும், தற்போதுவரை தனது குடும்பத்தால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறு
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில
உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ர
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
போர்க்களத்தில் உக்ரைன் படைகள் தொடர்ந்தும் பலத்த எதிர
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கி
தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதி
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று
சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதி
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங
அமெரிக்காவில் ரிச்மன்ட் நகரில் உள்ள வீடொன்றில் மனித உ
