யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்டுவ பகுதியில் 60 வயது தமிழ் பெண்ணிற்கு பேஸ்புக்கில் காதல் வலை விரித்து, பெருமளவு பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் பொலிசார் சந்தேகநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளவயதில் ஏற்பட்ட காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்ட பெண், திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது பிரித்தானியாவில் வசிப்பதாக கூறி, பேஸ்புக்கில் ஒருவர் அறிமுகமாகினார். இளைஞனாக அறிமுகப்படுத்திய அந்நபர், மனைவி தன்னை பிரிந்து சென்றுவிட்டதாக ‘சோகக்கதையை’ அவிழ்த்து விட்டதுடன் காதல் முன்மொழிவையும் வைத்த நிலையில் மூதாட்டியும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து பரிசுப்பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டு, அதற்காக செலுத்த பணம் கடன் தருமாறு இளைஞன் கேட்டதற்கிணங்க, அவர் வழங்கிய வங்கி இலக்கத்திற்கு பணம் வைப்பிலிட்டுள்ளார்.
அதன் பின்னர், வேறு காரணங்களை குறிப்பிட்டும் பணம் கேட்க, காதல் மயக்கத்தில் அந்த பணங்களையும் மூதாட்டி வைப்பிலிட்டு விட்டார். இவ்வறு 3.5 இலட்சம் ரூபா பணத்தை காதலனுக்காக வைப்பிட்ட பின்னர் காதலன் அல்வா கொடுத்து விட்டார்.
இதனையடுத்து காதலனின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர், பொலிஸ் நிலையத்தில் மூதாட்டி முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் சந்தேகரபரை தீவிரமாக தேடிவருவதாக கூறப்படுகின்றது.
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின
நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்ப
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பா
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க
சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம் இன்று அனுஷ்ட
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
