ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வலர்கள் 'நாங்கள் கோட்டாபயவுடன் இருக்கிறோம்' WeAreWithGota என்ற தொனிப்பொருளில் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை, எரிபொருள் விலையேற்றம், உணவுப் பொருள் விலையேற்றம், பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு என நாட்டில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன.
இது போக நாடு முழுவதும் தொடர் மின் வெட்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனால் மக்கள் அரசாங்கம் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில், அண்மை காலமாக சமூக ஊடகங்களில் GotaGoHome என்ற பிரச்சாரம் ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது குறித்த பிரச்சாரத்திற்கு எதிராக WeAreWithGota என்ற தொனிப்பொருளில் பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசு சார்பு சமூக ஊடக ஆர்வலர்கள் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். பெருமளவிலான அரச அதிகாரிகள் இந்தப் பதிவை பரிமாறிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்கு எதிராகவும் உயரும் விலையேற்றத்தை கண்டித்தும் மாபெரும் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
நாளுக்கு நாள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகரித்துக்கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எ
நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப
