துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்பெயர்ந்தோர் கப்பல் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் சிரியர்கள் எனவு அவர்கள் மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றனர் எனவும் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேற்று சனிக்கிழமை (19-03-2022) தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை 12 பேரின் உடலை கண்டுபிடித்த பிறகு, நேற்று சனிக்கிழமை மேலும் எட்டு உடல்களைக் கடலோரக் காவல்படையினர் மீட்டதாக அதிகாரி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
குறித்த பகுதியில் இன்னும் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது. துனிசியாவும் அண்டை நாடான லிபியாவும் ஐரோப்பிய கரைகளை அடைய விரும்பும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான முக்கிய ஆரம்ப இடங்கள் ஆகும்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனமான UNHCR, 2021 ஆம் ஆண்டில் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் சுமார் 1,300 புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நீரில் மூழ்கி அல்லது காணாமல் போனதாகக் கூறியுள்ளது,
இது உலகின் மிகக் கொடிய மற்றும் ஆபத்தான இடம்பெயர்வுப் பாதையாகும். 2014 ஆம் ஆண்டிலிருந்து 18,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பயணத்தை மேற்கொள்ள முயன்ற போது இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
ஜப்பானுடனான இலகு ரயில் போக்குவரத்தை (LRT) புனரமைக்க இலங்
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோ
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச
சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்
மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்
ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு பிறகு, உக்ரைன் மிகுந்
சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நிற்கும
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
நோட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள
உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டி
மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க
உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு
