துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்பெயர்ந்தோர் கப்பல் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் சிரியர்கள் எனவு அவர்கள் மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றனர் எனவும் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேற்று சனிக்கிழமை (19-03-2022) தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை 12 பேரின் உடலை கண்டுபிடித்த பிறகு, நேற்று சனிக்கிழமை மேலும் எட்டு உடல்களைக் கடலோரக் காவல்படையினர் மீட்டதாக அதிகாரி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
குறித்த பகுதியில் இன்னும் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது. துனிசியாவும் அண்டை நாடான லிபியாவும் ஐரோப்பிய கரைகளை அடைய விரும்பும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான முக்கிய ஆரம்ப இடங்கள் ஆகும்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனமான UNHCR, 2021 ஆம் ஆண்டில் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் சுமார் 1,300 புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நீரில் மூழ்கி அல்லது காணாமல் போனதாகக் கூறியுள்ளது,
இது உலகின் மிகக் கொடிய மற்றும் ஆபத்தான இடம்பெயர்வுப் பாதையாகும். 2014 ஆம் ஆண்டிலிருந்து 18,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பயணத்தை மேற்கொள்ள முயன்ற போது இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரா
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தன
உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச
உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்
ரஷ்யா - உக்ரைன் இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வரும் நி
அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற
உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மி
கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு
