உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைன் படையினரின் கடும் எதிர்தாக்குதலால் ரஷ்ய படையினர் நாளாந்தம் பெருமளவில் கொல்லப்படுவதுடன் படை தளபாடங்களும் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.
உக்ரைனில் கொல்லப்படும் ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை மறைக்க இரவு நேரங்களில் அவர்களது சடலங்களை ஏற்றிய விமானங்கள்,ரயில்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் அண்டை நாடான பெலாரஸ்க்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் 13 வரை 2,500-க்கும் மேற்பட்ட வீரர்களின் சடலங்கள் Homel-ல் இருந்து ரஷ்யாவிற்கு ரயில்கள் அல்லது விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உக்ரைன் படையெடுப்பில் தமது தப்பில் 500 இற்கும் குறைவான படையினரே உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினரை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்
கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்
ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன்
ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர
உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக ச
உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியு
உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்க
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்பு
இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து
பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்
பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி
