உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவதுமாக சரணடையும் வேண்டும் என ரஷ்யா எச்சரித்திருந்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் தங்கள் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ள ரஷ்ய ராணுவ வீரர்களை உக்ரைன் பாதுகாப்பு படையினர் அதிரடியாக தாக்கி வருகின்றனர்.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய ராணுவம் கடந்த சில வாரங்களாக சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலைக்குள் மரியுபோல் நகரில் உள்ள அனைத்து உக்ரைன் ராணுவத்தினரும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் இல்லையேல் மிக தீவிரமான தாக்குதலை சந்திக்க வேண்டும் என்று வெளிப்படையாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது இருந்தது.
ஆனால் சரணடைவதற்கு உக்ரைன் அரசு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து, மரியுபோல் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்ற ரஷ்யாவின் சலுகையையும் மறுத்துவிட்டது.
மேலும் உக்ரைனின் மரியுபோல் நகருக்குள் நுழைந்துள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் டாங்கிகள் ராணுவ வாகனங்கள் என அனைத்தின் மீதும் உக்ரைன் பாதுகாப்பு படையினர் தீவிர எதிர்ப்பு தாக்குதல் தொடங்கியுள்ளனர்.
வெளியுறவுக் கொள்கை மையத்தின் இயக்குநர் லூக் காஃபி இந்த எதிர்ப்பு தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரத்தை அவரது ட்விட்டர் தளத்தில் வெளியீட்டு, இவர்கள் மரியுபோல் நகரின் பாதுகாவலர்கள் மற்றும் முழுமையான ஹீரோக்கள், இவர்கள் கண்டிப்பாக வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடு
ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம
உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்ட
போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நா
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோ
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் ப
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்
சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுல
ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப
திருமண முகூர்த்தத்திற்கு மணமகன் வர தாமதமானதால் மணமகள
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப
