உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் பகுதியில் வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில்-ரஷ்யா 26 நாள்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்த நாட்டை முழுமையாக கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய ராணுவம் முழு மூச்சியில் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது.
நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிவடைந்து இருப்பினும், இதுவரை போரை நிறுத்துவது குறித்த எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை, இதனைதொடர்ந்து இருநாடுகளும் தங்கள் எதிரிகளின் ராணுவங்களை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி மாறிமாறி எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ்-வில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டில் வரிசையில் காத்துக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், ரஷ்ய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் குறித்த cctv வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/i/status/1505839896426074113
உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ர
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் க
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒர
உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்
உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ர
