உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையர் டாட்யானா மொஸ்கல்கோவா தெரிவித்துள்ளார்.
உலகநாடுகளின் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் இருநாடுகளும் தங்கள் எதிரிகளின் ராணுவப்படைகளை அழித்து, அவர்களின் ராணுவ வீரர்களை தொடர்ந்து மாறிமாறி கைது செய்து வருகின்றனர்.
இதனிடையே உக்ரைன் ராணுவத்தின் வசம் பிடிபட்ட ரஷ்ய ராணுவ வீரர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் வாக்குமூலம் வழங்குவது தொடர்பான வீடியோ ஆதாரங்களை உக்ரைன் அரசு தொடர்ந்து வெளியீட்டு வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்ட உக்ரைன் ராணுவ வீரர்களின்குறித்த எந்தவொரு தகவலும் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்தநிலையில், சர்வதேச செஞ்சுலுவை சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட 500 உக்ரைன் நாட்டு போர் கைதிகளை பற்றிய தரவுகளை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
மேலும் போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ளவும் மாஸ்கோ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து, பேசியுள்ள ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையர் டாட்யானா மொஸ்கல்கோவா உக்ரைனில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ரஷ்யா ராணுவ வீரர்களுக்கு மாற்றாக உக்ரைனின் வீரர்களை பரிமாறி கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். 

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆ
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவ
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழு
பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படு
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு
உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்ச
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த வி
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்
"நாசிசத்தின் இரத்தக்களரி மறுகட்டமைப்பை" ரஷ்யா செய
